ஓய்வு !!

1 comments


நாம் உண்டு மகிழ
வாழ்கை தந்த வர்க்கம் !

என்று உதிரும் இவர்கள்
உதிரம் முழுதும் உறையும் துன்பம் ??

வென்றவர் வரலாறு மட்டும் நம்மிடையே!
வெட்கி தவிப்போம் தீர்வு காணோம் !

உரிமை கொடுப்போம் உழைப்போருக்கு - ஏனெனில்
அவர்கள் உழைத்தார்கள்
நமது ஓய்விற்காக...............

தமிழர் திருநாள் !!!!

0 comments
வெல்லமும் அரிசியும்
  இனித்திடும் திருநாள் !
படைத்திட்ட பயிருக்கு 
நன்றி நவிலும் நன்னாள் !!
உண்மையை  உயிராக்கிக்கொண்ட
உழவர் திருநாள்! - நம்
தமிழர் திருநாள் !!!!





நேரம் !!!

0 comments
உன் கரம் கோர்த்து கதை பேச நேரம் உண்டு என்னிடம்!
            என் கதை கேட்டு கண் மலர நேரம் இல்லை உன்னிடம்!!!!!!!
வானளவு வாரி வழங்க வார்த்தைகள் உண்டு என்னிடம்!
            தேனாக தேற்றி தேதி ஒதுக்க நேரம் இல்லை உன்னிடம்!!!!!!
வீணையென நான் மாற ஆசை உண்டு என்னிடம் !
            வீணாக பொழுதை கழிக்க விருப்பம் இல்லை உன்னிடம்!!!!!!

காற்றின் மொழியில் கீதம் இசைக்க நாதம் உண்டு என்னிடம் !
            வெற்றியின் சுவையினை சுவைக்க  சுவை  இல்லை உன்னிடம்!!!
போற்றி புகழ பல கோடி கோரிக்கைகள் உண்டு என்னிடம்!
            நெற்றி வேர்வையின் துளிகளை துடைக்க  நொடி  இல்லை உன்னிடம்!!!

நித்தம் உன் நினைவுகளில் நீந்த நேசம் உண்டு என்னிடம்!
            ரத்தம் உறைய பித்தம் பிடிக்கும் மனம் இல்லை உன்னிடம்!
சத்தம் போட்டு சண்டையிடும் இயல்பு உண்டு என்னிடம்!
சித்தம் எல்லாம் செலுத்த நாழி இல்லை உன்னிடம்!! 

நேரமெல்லாம் நீயானாய் என்னிடம் !!!!!
எனக்கான நேரம் என்று கிடைக்கும் உன்னிடம்???????


தொடுவானம் !

0 comments

என் மேல் தவழ வந்த மழை
காற்றின்   சீற்றத்தால் தொலைந்து போனது!!
யாரிடம் கோபம் கொள்வது?-    
 என் கை தொடும் தூரத்தில் 
  நீ இருந்தும் கதறிய என் விழிகள் 
உன்னை பார்ப்பது உனக்கு மட்டும் ஏன் புரிவதில்லை??
உன் குரல் கேக்கும் திசை நோக்கி தேசியென திரிகிறேன் நான் !!
உன் குழம்பிய மனமுன்- 
என் கலங்கிய கண்ணும்
ஒன்றாய் இணைய மறுக்கிறது எப்பொழுதும் ??????
மீண்டும் வசந்தம் வீசும் 
தேடி தான் பாரேன் !
 உரக்க ஒரு முறை கூறேன்
 இக்கணமே வருவேன்..
 உந்தன் கனமான மௌனத்தை சுமக்க !!!!!

மழை!!

0 comments
மண்ணின் மனமும்
பெண்ணின் குணமும்
தென்னையின் வளமும்
விண்ணளவு சுரக்கும் பொன்னாம் !!


பசுமையின் சிறப்பும்
கருமையின் விரிவும்
பெருமையென கொணரும்
புதுமையென பொழியும் அழகாய்!!


மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்
மக்களுக்கு உயிரூட்டும் உணவாய்
மனமும் குணமும்
மனதோடு நிறைந்திடும் இதமாய் !!


பழமையும் புதுமையும்
பரவசமாய் படர்ந்திடும் பதமாய்
பன்னீரூம் செழுநீரும்
விண்ணின் நீராகும் சிறப்பாய்!!


கானல் நீரும் காணா நீராகி
காதல் புரியும் காற்றாகி
கண் முன்னே சுரக்கும் உயிராகி
வெண் மேகம் பொழியும் அருவியாய் !!











ஆண்!!!!!!!

0 comments
ஆயுதம் ஏந்தா
அறநெறி நடத்தும் அரசாட்சி!!
அன்று முதல் இன்று வரை
தொடரும் சூழ்ச்சி!!

வீசும் காற்றிலும்
வாசம் தன் வசம் வேண்டுமென
வீரம் பேசும்!!
நேசமோ உண்டு இவனிடம்
வேஷமும் உண்டு சிலரிடம் !
தேசங்கள் வேறுபட்டாலும்
சுவாசம் ஒன்றென பறைசாற்றும் ஆண் வாசம்!!
தேடும் இன்பமும்
தேடா துன்பமும்
மீண்டும் வேண்டாமென
நாளும் கதை பேசும் !!

வேறிடம் போக மனம்
- புகா பாசமும் உண்டு
சேரிடம் சிறப்பினை
சீராய் பரவும் குணமும் உண்டு!!

நூற்றாண்டு கடப்பினும்
நூறு விதிகள் போடும்
நூலிழையில் நூலகம்
நடத்தும் நெறியும் உண்டு !!

Followers

Powered by Blogger.
 
BloggerTheme by BloggerThemes | Design by 9thsphere